மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!
Sep 6, 2025, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், தமிழகத்தின் பல மலைக் கிராமங்கள், சாலை வசதி இன்றி இருக்கின்றன.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஈசல்திட்டு மலைக் கிராமத்தில், சாலை வசதி இல்லாததால், மணியன் என்ற இறந்தவர் உடலை, கரடுமுரடான மலைப் பகுதியில், தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

உடுமலைப்பேட்டை பகுதியில், பல மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் பல ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட இதுவரை செய்து தரப்படவில்லை. இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை.

பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், போராடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ₹59 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சாலை அமைக்கப்படவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.

மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்துக்கு, சுமார் ₹ 6,000 கோடி வரை தமிழகத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தத் திட்டத்துக்கு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் திமுக அரசு தெரிவித்தது. எங்கே சென்றது இந்த நிதி எல்லாம்? தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன.

தமிழகத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், மிகவும் அவலநிலையில் வசித்து வருகிறார்கள். உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, அவை அனைத்திற்கும் சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Where did all the central government funds go?: Annamalai Question
ShareTweetSendShare
Previous Post

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

Next Post

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

Related News

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies