மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!
Jul 26, 2025, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் , வெளிநாடுகளின் பெயரில் போலியாகத் தூதரகம் தொடங்கி மோசடி ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான இந்த மோசடி குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..

போலி மருத்துவமனை, போலி நிதி நிறுவனம், போலி வங்கிகள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். போலி நீதிமன்றம் பற்றிக் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், தற்போது போலி தூதரகத்தை உருவாக்கி பணமோசடி செய்து அனைவரையும் அதிரச் செய்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தர் ஹர்ஸ்வர்தன் ஜெயின். தொடக்கம் முதலே பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்ட அவர், ஒரு புதுமையான முயற்சியாகப் போலி தூதரகம் ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் பெயரில் தூதரகம் தொடங்கினால், தூதரகம் தொடங்கிய அடுத்த நொடியே கம்பி எண்ண வேண்டி வரும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

ஆகவே,  செபோர்கா, பவுல்வியா, லோடோனியா போன்ற அங்கீகரிக்கப்படாத சிறிய நாடுகளின் பெயரில் தூதரகங்களை ஆரம்பித்தார். அதற்காக காஸியாபாத் நகரில் 2 மாடி கட்டடம் ஒன்றையும் வாடகைக்கு எடுத்தார்.

தூதரகம் தொடங்கினால் மட்டும் போதுமா? அதனை மக்கள் நம்ப வேண்டாமா?  எனவே, பிரதமர் மோடி, ஏபிஜே அப்துல் கலாம் போன்றவர்களுடனும், உலக நாட்டுத் தலைவர்களுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்டது போன்ற புகைப்படங்களைத் தயார் செய்து அலுவலகம் முழுவதும் தொங்கவிட்டார்.

சமூக வலைதளங்களிலும் தனது தூதரகத்திற்கென்று பிரத்யேக கணக்குகளைத் தொடங்கிய அவர், தூதரகத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது பதிவிட்டு வந்தார். பல்வேறு நாடுகளின் போலி முத்திரைகள், போலி நெம்பர் போர்டுகள், போலி பாஸ்போர்ட்கள் என பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்து முடித்தார் ஹர்ஸ்வர்தன் ஜெயின்.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமா?.. அதுவும் குறைந்த செலவில்?.. சற்றும் தாமதிக்காமல் தனது தூதரகத்தை அணுகலாம் என அறிவித்த அவர், பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றினார்.

அதோடு, பார்ட் டைமாக ஹவாலா பண மோசடியிலும் ஈடுபடத் தொடங்கினார். எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த போலி தூதரகம் குறித்த செய்தி காவல்துறையின் காதுக்குச் சென்றுவிட்டது.

உடனடியாக இது குறித்த சோதனை செய்த போலீசார், போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஸ்வர்தன் ஜெயினை கைது செய்தனர். மேலும்,  34 நாட்டு முத்திரைகள், 44 லட்சம் ரூபாய் பணம், 18 தூதரக நம்பர் பிளேட்கள், 4 ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி மற்றும் ஆன்மீக குரு சந்திரசாமி ஆகியோருடன் ஹர்ஸ்வர்தனுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்வதில் காட்டிய இந்த நுட்பத்தையும், இந்த தனித்துவத்தையும் உருப்படியாக ஒரு தொழில் தொடங்கி, அதில் காட்டியிருந்தால் ஹர்ஸ்வர்தன் ஜெயின் சாதித்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: New route in fraud: A thief who started a fake embassy and embezzled moneyபோலி தூதரகம்மோசடியில் புது ரூட்பணம் சுருட்டிய கில்லாடி
ShareTweetSendShare
Previous Post

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Next Post

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies