மதுரையில் சட்டவிரோதமாகக் கருப்புப் பணத்தைக் கைமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதியில் ஹவாலா பணமாற்ற கும்பலின் நடமாட்டம் இருப்பதாக விளக்குத்தூண் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகம்படும்படி நின்றுக்கொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.
அதில் 5 பேர் கொண்ட கும்பல் ஹவாலா பணத்தைக் கைமாற்றியது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார், 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.