தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக பேருந்து, ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கொண்ட நகரமாகத் தூத்துக்குடி திகழ்கிறது.

தூத்துக்குடியில் தொழில்துறை வளர்ச்சி அதிகரித்து வருவதாலும், பயணிகளின் தேவை காரணமாகவும் வாகை குளத்தில் உள்ள விமான நிலையத்தைப் புதுப்பிக்க வேண்டிய தேவை எழுந்தது.

அதன்படி, 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயிரத்து 350 மீட்டாராக இருந்த ஓடுதளத்தின் நீளம், தற்போது, 3 ஆயிரத்து 115 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சென்னைக்கு அடுத்தபடியாக  மிக நீண்ட ஓடுதளம் கொண்ட விமான நிலையமாகத் தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. மேலும், அங்கு சுமார் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.

17 ஆயிரத்து 341 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தின் மூலம் அதிக விமானங்களைக் கையாள முடியும். இந்த முனையத்தில், கட்டுப்பாட்டுக் கோபுரம், விமான போக்குவரத்து கண்காணிப்பு, தீயணைப்பு கட்டடம் உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன.

இந்த முனையத்தின் விமான புறப்பாடு பகுதியில், 21 செக்-இன் கவுண்டர்களும், 4 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த புதிய முனையத்திற்குச் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலையும் போடப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் 4 ஸ்டார் அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது.

விமானம் வரை பயணிகள் நடந்து செல்வதைத் தடுக்கும் வகையில், 3 aerobridge-கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 விருந்தினர் அறைகள், பெரிய உணவகம், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சூர்ய சக்தி விளக்குகள், இலவச வைஃபை போன்ற பல்வேறு வசதிகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமான நிலையத்தில் இனி ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். அதற்கு ஏற்றவாறு பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 500 பயணியர் வாகனங்களை நிறுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இதுவரை பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க முடியும். பெரிய ஏர் பஸ், போயிங் விமானங்கள் வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் மூலம் பயணிகள் இனி மிகவும் இலகுவாகப் பயணம் மேற்கொள்ள முடியும். தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கும் இந்த விமான நிலையம் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

Tags: pm modi newsதூத்துக்குடிRenovated airport in Thoothukudiபுதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்Thoothukudi NEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

Next Post

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies