ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் - தலைவர்கள் புகழாரம்!
Oct 9, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Web Desk by Web Desk
Jul 27, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் குடியரசுத் தலைவ;u ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் ஏவுகணை நாயகரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான  டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களது நினைவு தினம் இன்று. தேசத்தின் வளர்ச்சி இளைஞர்களது கையில் என்பதை தீர்க்கமாக நம்பியவர்,

தனது பேச்சுக்களின் மூலமாக இளைய சமுதாயத்தை வெகுவாக கவர்ந்தார். ‘பொக்ரான்’ அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வையை பன்மடங்கு உயர்த்திக் காட்டினார்.

அய்யா, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களது நினைவு தினத்தில், தேசத்திற்கு அவராற்றிய அறிவியல் பணிகளை நம் இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டுவோம்; அய்யாவின் நினைவுகளை என்றென்றும் போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தருமான, பாரத ரத்னா, டாக்டர் அப்துல் கலாம் அவர்களது நினைவு தினம் இன்று.  எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதையும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்கள் கல்வி அறிவையும், தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதிலும் செலவிட்டவர்.  மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாகத் திகழும் ஏவுகணை நாயகன் ஐயா கலாம் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், “கனவு காணுங்கள்” என்று அனைத்து இந்திய மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்கப்படுத்திய, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று. இன்று உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுக்க முக்கிய காரணங்களில் ஒருவராகத் திகழ்பவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள். வல்லரசு நாடுகள், தங்களிடம் அணுகுண்டு வைத்துக் கொண்டு உலகை அச்சுறுத்தியபோது, இந்தியாவாலும் அணுகுண்டு உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்.

இன்று நம்மிடம் இருக்கும் ஏவுகணை தொழில்நுட்பங்களுக்கெல்லாம் விதை போட்டு, அதை மரமாக வளர்த்துக் கொடுத்தவரும் நமது அப்துல் கலாம் அவர்கள்தான். இன்றைய நாளில், அவர் செய்த சாதனைகளை நினைவுகூர்ந்து, அவரது பெருமையைப் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: annamalaiminister l muruganNayinar NagendranFormer President APJ Abdul Kalam's death anniversary
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

Next Post

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

Related News

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies