ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால், அன்றைய தினம் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் நிசார் எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வரும் 30-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதனால் அன்றைய தினம் பழவேற்காடு, எளாவூர், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசின் மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும், மீறி கடலுக்கு செல்லும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.