உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், குணமடைந்து வீடு திரும்பினார்.
சென்னையில் கடந்த 21 ஆம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமான பணிகளை தொடர்வார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.