விநாயகர் சதூர்த்தி விழா - சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
Oct 30, 2025, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 08:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் தெருவில் வைத்து கொண்டாடும் வரை பல்வேறு வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் கோலகலமாக கொண்டாடி மகிழும் பண்டிகை தான் விநாயகர் சதூர்த்தி. அத்தகைய விழாவுக்காக விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி பெரும்பங்கு வகிக்கிறது.

இங்கு வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானாவிலும் நல்ல வரவேற்பு உண்டு என்பதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் ஒசூருக்கு வருகை புரிந்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் ஒசூரில் முகாமிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

சுமார் இரண்டாயிரத்து 500 வடமாநிலத் தொழிலாளர்கள் 250க்கும் அதிகமான இடங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் வைத்து வணங்கும் விநாயகர் சிலையில் தொடங்கி தெருக்களில் வைத்து வணங்கும் பிரம்மாண்ட சிலைகள் வரை பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாராகி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அறிவுறுத்தலை பின்பற்றி தற்போது களிமண், கிழங்குமாவு, காகிதக் கூழ் ஆகியவற்றை வைத்து விநாயகர் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

விநாயகர் சதூர்த்தி பண்டிகைக்கு இன்னமும் ஒரு மாதம் இருக்கும் நிலையிலேயே சிலை வாங்குவதற்கான முன்பதிவு குவிந்து வருகிறது. ஒசூர் பகுதியில் குறைந்த விலையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் தயாரிக்கப்படும் விநாயகர் சிலை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Ganesha idols makingHosurPollution Control BoardGanesha Chaturthi festival
ShareTweetSendShare
Previous Post

இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞர் – அடித்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனம்!

Next Post

கொடிவேரி அணையில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி!

உத்தரப்பிரதேசம் : படகு கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலி – 8 பேர் மாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies