தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் - முந்திக்கொண்டு அறிவித்த டிரம்ப் - சிறப்பு தொகுப்பு!
Nov 1, 2025, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் – முந்திக்கொண்டு அறிவித்த டிரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 09:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது தாய்லாந்தும், கம்போடியாவும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக முந்திக்கொண்டு அறிவித்துள்ளார். காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்..

தாய்லாந்து – கம்போடியா இடையே தீராத எல்லைப் பிரச்சனை, ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள், ஏவுகணைகளை வீச, பீரங்கிகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது கம்போடியா…

இருநாடுகளுக்கும் இடையே 4வது நாளாக யுத்தம் நீடித்து வரும் நிலையில், 33 பேர் உயிரிழந்ததாகவும், 1 லட்சத்து 68 ஆயிரம் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1953 வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில், 1907-ல் உருவாக்கப்பட்ட அந்த வரைபடம் தான இடியாப்ப சிக்கல்களுக்கு மூலக்காரணமாக பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய எல்லையில், உள்ள புராதன கோயிலுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வரும் நிலையில்,சர்வதேச நீதிமன்றம் கம்போடியாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதனை தாய்லாந்து ஏற்காததால், பிரச்னை புகைந்து கொண்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த கம்போடியா – தாய்லாந்து எல்லைப் பிரச்னை ஒரு முழு வீச்சு போராக உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

யுத்தம், அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இருநாடுகளையும் எச்சரித்ததாகவும், இருநாடுகளும் உடனடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வழக்கம் போல் அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்….

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதல், தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள டிரம்ப், எந்த நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தை நிறுத்தியதாக அடிக்கடி கூறி வரும் டிரம்ப், தற்போது கம்போடியா – தாய்லாந்து போரை கையில் எடுத்திருக்கிறார் என்கிறது சர்வதேச சமூகம்…

Tags: india pak warpakistan warUS President TrumpThailand Cambodia warCambodian military positions
ShareTweetSendShare
Previous Post

ஆழியார் வால்பாறை மலைப் பாதை காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

Next Post

திரிபுராவில் மனதின் குரல் நிகழ்ச்சியின் போது தாக்குதல் – பாஜக தொண்டர்கள் காயம்!

Related News

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் ஆதரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நட்சத்திர சொகுசு மாளிகை – பாஜக குற்றச்சாட்டு!

560-க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் – தமிழக ஆளுநர் புகழாரம்!

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் அளிக்கிறேன் – செங்கோட்டையன்

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies