தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் - முந்திக்கொண்டு அறிவித்த டிரம்ப் - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் – முந்திக்கொண்டு அறிவித்த டிரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 28, 2025, 09:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது தாய்லாந்தும், கம்போடியாவும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக முந்திக்கொண்டு அறிவித்துள்ளார். காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்..

தாய்லாந்து – கம்போடியா இடையே தீராத எல்லைப் பிரச்சனை, ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள், ஏவுகணைகளை வீச, பீரங்கிகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது கம்போடியா…

இருநாடுகளுக்கும் இடையே 4வது நாளாக யுத்தம் நீடித்து வரும் நிலையில், 33 பேர் உயிரிழந்ததாகவும், 1 லட்சத்து 68 ஆயிரம் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1953 வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில், 1907-ல் உருவாக்கப்பட்ட அந்த வரைபடம் தான இடியாப்ப சிக்கல்களுக்கு மூலக்காரணமாக பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய எல்லையில், உள்ள புராதன கோயிலுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வரும் நிலையில்,சர்வதேச நீதிமன்றம் கம்போடியாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதனை தாய்லாந்து ஏற்காததால், பிரச்னை புகைந்து கொண்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த கம்போடியா – தாய்லாந்து எல்லைப் பிரச்னை ஒரு முழு வீச்சு போராக உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

யுத்தம், அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இருநாடுகளையும் எச்சரித்ததாகவும், இருநாடுகளும் உடனடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வழக்கம் போல் அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்….

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதல், தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள டிரம்ப், எந்த நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தை நிறுத்தியதாக அடிக்கடி கூறி வரும் டிரம்ப், தற்போது கம்போடியா – தாய்லாந்து போரை கையில் எடுத்திருக்கிறார் என்கிறது சர்வதேச சமூகம்…

Tags: india pak warpakistan warUS President TrumpThailand Cambodia warCambodian military positions
ShareTweetSendShare
Previous Post

ஆழியார் வால்பாறை மலைப் பாதை காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

Next Post

திரிபுராவில் மனதின் குரல் நிகழ்ச்சியின் போது தாக்குதல் – பாஜக தொண்டர்கள் காயம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies