செங்கம் அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் பகுதியில் அய்யனாரப்பன் காட்டுக் கோயில் உள்ளது. இங்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் செ.அகரம், பண்டிதப்பட்டு, சின்னகோலாபாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி, பன்றிகளைப் பலியிட்டும் வழிபாடு நடத்தினர்.