திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், இளைஞரின் தாய் மற்றும் சகோதரரை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் வழக்கைக் கடந்த 14ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அஜித்குமாரை காவலர்கள் அழைத்துச் சென்ற இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள், சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞரின் வீட்டிற்குச் சென்ற டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள், தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை விசாரணைக்காக மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு தங்கள் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர்.