பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடா்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம்!
Sep 17, 2025, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடா்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம்!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம் அனல் பறந்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் நேற்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கை, அமெரிக்காவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை என்று கூறிய ஜெய்சங்கர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை எனத் தெரிவித்தார். ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக மற்ற நாடுகளிலிருந்து மே 10ஆம் தேதி அழைப்பு வந்ததாகக் கூறிய அவர், ராணுவ நடவடிக்கைக்கான தலைமை தளபதி மூலம் இதனைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவுடன் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்துப் பேசவில்லை என்றும், வணிக ரீதியான எந்தவொரு பேச்சும் நடக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

ஆப்ரேஷன் சிந்தூருடன் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை நின்றுவிடாது என்று எச்சரித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டு மக்களைக் காக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சியினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் வேறு சில நாடுகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியினர் அந்நியர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகக் கூறிய அவர், அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாகச் சாடினார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கும் அவர்கள் அங்கேயே அமர்ந்திருப்பார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்  மக்களவையில் விளக்கமளித்தார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: பஹல்காம் தாக்குதல்மக்களவைDiscussion in Lok Sabha on Pahalgam attackOperation Sindhupal till midnightஆப்ரேஷன் சிந்தூா்
ShareTweetSendShare
Previous Post

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!

Next Post

அமெரிக்கா : ஷாங்காய் தினத்தை ஒட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகள்!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies