செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? - உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார்? என உச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் லஞ்ச ஊழல் வழக்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பிருப்பதால் தமிழ்நாடு காவல்துறை வழக்கை முறையாக விசாரிக்காமல் இழுத்தடிப்பதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலிருந்தால் வழக்கு விசாரணை எப்போது முடிவடையும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் கொடுத்த ஏழைகளையும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் ஆயுட்காலம் முழுவதும் வழக்கு முடிவுக்கு வராது என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியாற்றிய இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார் என்பதை தாங்கள் அறிய விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அது தொடர்பாகத் தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஒட்டுமொத்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சிறு குறிப்பை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags: செந்தில் பாலாஜிApart from Senthil Balajiwho are the middlemen and officials who received bribes? - Supreme Court questions in a flurryஉச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

Next Post

பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies