மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்காவில்  8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தால் 13 அடி உயரம் வரையிலான பேரலைகள் உருவாகி, சுனாமி தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பசிபிக் பெருங்கடலில் உள்ள நெருப்பு வளையம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

ஒரு போர்த்துகீசிய மாலுமி மற்றும் ஆய்வாளரான ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), ஸ்பெயினின் அரசவைக்காக பணியாற்றினார். 1519ம் ஆண்டில் பூமியைச் சுற்றிவர முதல் கடற்பயணத்தை ஸ்பெயினிலிருந்து தொடங்கினார். ஐந்து கப்பல்கள் கொண்ட குழுவை வழிநடத்திச் சென்ற ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), வழியில் பிலிப்பைன்ஸில் உள்ள மக்டான் தீவில், உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் கொல்லப்பட்டார்.

மாகெல்லனின் பயணம் முழுமையாக நிறைவடையவில்லை. ஆனாலும் அவரது கப்பல்களில் ஒன்றுமட்டும்  ஸ்பெயினுக்குத் திரும்பி, பூமியைச் சுற்றிய உலகின் முதல் பயணத்தை நிறைவு செய்தது. பசிபிக் பெருங்கடலைக் கடந்த முதல் ஐரோப்பியரான  ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), பெருங்கடலில் நீரின் அமைதியைக் கண்டார். அதனால்தான் இன்று வரை,பசிபிக் பெருங்கடல் என்று அழைக்கப் படுகிறது. பசிபிக் என்றால் அமைதியானது என்று பொருள்படும்.

இந்த பசிபிக் பெருங்கடலைச்  சுற்றிலும் ஆபத்தான எரிமலைகள் உள்ளன என்பதை ஃபெர்டினாண்ட் மாகெல்லனுக்குத் தெரிந்திருக்கவில்லை. நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு எரிமலைச் சங்கிலியாகும். நெருப்பு வளையம் ஒரு சரியான வட்டம் அல்ல, குதிரைலாடம் போன்ற  வடிவத்தைக் கொண்டது.

இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,சிலி,பெரு, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை,ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் உள்ளிட்ட 15 நாடுகள் இந்த நெருப்பு வளையத்துக்குள் உள்ளன.

இதில், தென்அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை,(Bering Sea) பேரிங் கடல் வழியாக தெற்கே நியூசிலாந்து வரையிலும்,  452 எரிமலைகள் ஒரு நெருப்புச் சங்கிலி போல நீண்டுள்ளது.

40,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நெருப்பு வளையம்,  ஜப்பான், இந்தோனேசியா, சிலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கியதாகும். உலகின் பூகம்பங்களில் தோராயமாக 90 சதவீதம் நெருப்பு வளையத்தைச் சுற்றி நிகழ்கின்றன.

உலகில் கடல் மட்டத்துக்கு மேலே உள்ள எரிமலைகளில்  75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை  நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளன. நெருப்பு வளையம் என்பது தட்டு டெக்டோனிக்ஸ் விளைவு எனப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் தரை, ஒரு கடல் தகடான பசிபிக் தட்டு, வட அமெரிக்க தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பிலிப்பைன்ஸ் தட்டு, ஆஸ்திரேலிய-இந்திய தட்டு மற்றும் யூரேசிய தட்டு உள்ளிட்ட  தகடுகளால் சூழப்பட்டுள்ளது.

இந்த தகடுகளின் இயக்கம் அழிவுகரமான தட்டு விளிம்புகளில் துணை மண்டலங்களை உருவாக்குகிறது, இது எரிமலைகள் உருவாகவும் பூகம்பங்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது. 1883-ல் Krakatoa கிரகடோவா தீவில் ஏற்பட்ட பூகம்பம், 1906-ல்  சான் பிரான்சிஸ்கோபூகம்பம், 1960-ல் சிலியில் ஏற்பட்ட  பூகம்பம்,1964-ல் அலாஸ்கா பூகம்பம், 2004-ல் வடக்கு சுமத்ரா பூகம்பம், ஜப்பானில் சுனாமி, 2011-ல் ஜப்பானின் Fukushima ஃபுகுஷிமா அணுசக்தி பேரழிவு, 2016-ல்  ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட பூகம்பம் போன்றவை வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளாகும்.  8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பெரும்பாலான பூகம்பங்கள் நெருப்பு வளையத்துக்குள் மட்டுமே  உள்ளன.

நெருப்பு வளையத்தில் பூகம்பங்களை முன்கூட்டியே விஞ்ஞானிகளால் கணிக்க முடியாதா ? என்ற கேள்விக்கு பெரும்பாலான புவியியல் வல்லுநர்கள் நிலநடுக்கங்களைக் கணிப்பது சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள். பூகம்பங்கள் எப்போது, எங்கு ஏற்படும் என்பதை எந்த துல்லியத்துடன் கணிப்பது இன்னமும் கடினமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், உலகெங்கிலும் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த நில அதிர்வு கருவிகளின் நெட்வொர்க், பூகம்பங்கள் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை சில நொடிகளில் வழங்குகின்றன.

இதில் கிட்டத்தட்ட நிகழ் நேரத்தில், தகவல்களை அளிக்கும் விஞ்ஞானிகளின் திறனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும்,நெருப்பு வளையத்துக்குள் இருக்கும் நாடுகளின் புவியியல் ஆய்வாளர்கள்,ஒன்றிணைத்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லா நாடுகளும்  கடல் மற்றும் நில அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tags: சுனாமி பீதிThreatening Ring of Fire: More than 10 countries in fear of earthquakes and tsunamisமிரட்டும் நெருப்பு வளையம்பூகம்பங்கள்
ShareTweetSendShare
Previous Post

நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணம் : வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்

Next Post

சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies