பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? - தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Jan 14, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூமி நோக்கி மிகப்பெரிய ஆபத்து வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அது என்ன ஆபத்து என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா? இல்லையா?. நம்பலாமா? நம்பக் கூடாதா? என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்ற வருகின்றன.

ஆனால், ஏலியன்கள்  உள்ளதாகவோ, அவர்கள் பூமிக்கு வந்ததாகவோ இதுவரை வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாறு இந்தாண்டு மாற்றி எழுதப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏலியன்கள் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தக் கூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறி, அவர்கள் பரபரப்பைக் கூட்டியுள்ளனர். இது தொடர்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  வான்இயற்பியலாளர் அவி லோயப் உள்ளிட்ட 3 பேர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், பூமியை நோக்கி விண்கலம் ஒன்று அசுர வேகத்தில் வந்துகொண்டு இருப்பதாகவும், இது சர்வ நிச்சயமாக ஏலியன்கள் அனுப்பிய விண்கலம்தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஐ அட்லஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், 24 கிலோ மீட்டர் பரபரப்பளவு கொண்டுள்ளதாகவும், சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் வரை, பூமியில் இருந்தபடி தொலைநோக்கி வழியாக விண்கலத்தைப் பார்க்கலாம் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், நவம்பர் இறுதியில் அந்த விண்கலம் சூரியனை நெருங்கும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கலத்தின் மூலம் வேற்றுகிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் சிலர் எச்சரிக்கின்றனர்.

ஆனால், இவை அனைத்துமே அதீத கற்பனை என விஞ்ஞானிகளின் மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்து வருகிறது. பூமியை நோக்கி வரும் இந்த வான்பொருள் வால் நட்சத்திரமாக இருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், இப்போதைக்கு எதுவும் முடிவாகவில்லை. அந்த வான்பொருள், வெறும் வால்நட்சத்திரம்தானா, அல்லது உண்மையிலேயே ஏலியன்களின் விண்கலமா என விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

2025ம் ஆண்டு ஏலியன்கள் மனிதர்களை தொடர்பு கொள்வார்கள் என, பாபா வாங்கா ஏற்கனவே ஆருடம் தெரிவித்திருந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களின் தற்போதைய அறிக்கை, அந்த ஆருடத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வேற்றுகிரகவாசிகள் எப்படி இருப்பார்கள், வந்தால் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஏலியன்கள் பூமிக்கு வந்தால், முதல் வேலையாக அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்பதுதான், இதுவரை எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் மூலம் நாம் அறிய வரும் செய்தி. அதன்படி பார்த்தால், இந்தாண்டு ஏலியான்கள் வந்தாலும், அவர்களின் முதல் குறி அமெரிக்காவாகத்தான் இருக்கும் எனவும், ஆகவே இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: Aliens coming towards Earth? - Scientists warn that they may attackபூமியை நோக்கி வரும் ஏலியன்கள்?
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!

Next Post

“பிளாக்மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies