தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ஜனம் தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை முழுவீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு குழுவினரின் பயணம் சென்னையில் இருந்து துவங்கியது.
முதல் நாளில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிய உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட பின்பு மக்களின் கருத்துக்களை தொகுத்து வழங்கி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி வெளியிட உள்ளது.