கன்னியாகுமரி அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி குளச்சலுக்கு வருகை தருவதாகக் கூறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த செயலைத் தடுக்க முயன்ற குமரி டிரஸ்ட் ஆதரவாளர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மோதலின் போது ஃபெரோஸ் என்ற நபர் பலத்த காயமடைந்து, குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி தரப்பினர், மாவட்ட காவல்துறையின் மெத்தனப் போக்கே நிலைமை இந்தளவிற்குச் செல்வதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.