கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், மூதாட்டியின் உடலை உடற்கூறாய்வு செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பேரனை விட்டு விடுமாறு கெஞ்சிய மூதாட்டியைக் காவலர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியதால், மூதாட்டி உயிரிழந்ததாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், அல்போன்சாள் என்பவர், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்த சூசைமரியாளின் உடலை முறையாக உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டது.
மேலும், அதனை வீடியோ பதிவு செய்யவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மேற்கொள்ளவும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு,
உடற்கூராய்வு செய்யப்பட்ட பின், சூசைமரியாளின் உடலைப் பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அறிவுறுத்தியது.