ராஜஸ்தானில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டு வருகின்றன.
அஜ்மீர் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகள், விடுதிகள், கடைகள் ஆகியவற்றை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தாராகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.