ரஷ்யா - அமெரிக்கா இடையே போர்?
Aug 2, 2025, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

Web Desk by Web Desk
Aug 2, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள், இரு நாடுகள் இடையேயான போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், ரஷ்யா அதனைச் செவி கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.

மாறாக, தனது தாக்குதலின் வீரியத்தை அந்நாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததுடன், அந்நாட்டுடன் வணிக செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறது.

மேலும், ரஷ்யா இன்னும் 50 நாட்களில் போரைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ கிடையாது எனவும், ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை அந்நாட்டின் மீதான போருக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த பேச்சால் சீண்டப்பட்ட ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை அனுப்ப ஆணையிட்டார். இதற்குப் பதிலளித்த ரஷ்யா, அமெரிக்காவைக் காட்டிலும் தங்களிடம் அதிக அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளதாகத் தெரிவித்தது.

அத்துடன், ஒலியைப் போன்று  10 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடிய ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸ் நாட்டில் நிலைநிறுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் நாட்டை சுற்றி நேட்டோ பல நாடுகள் உள்ளன. எனவே, அந்த நேட்டோ நாடுகளையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையில் ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரசில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், ராணுவப் பணியில் ஆரெஷ்னிக் ஏவுகணைகள் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதியில் அவை பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் எனவும் கூறினார்.

ஆரெஷ்னிக் ஏவுகணைகள், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாதவை. இதன் காரணமாக அவற்றை உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. அத்தகைய ஏவுகணைகளை நேட்டோ நாடுகளின் எல்லையில் நிலைநிறுத்துவது தற்போதுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் இத்தகைய போக்கு, உக்ரைன் போர் முடிவுக்கு வருவதைத் தடுப்பதுடன்,  மற்ற நாடுகளுடன் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா இடையேயான நேரடி போராகவும் இது மாற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Tags: War between Russia and America?ரஷ்யா - அமெரிக்கா இடையே போர்?ரஷ்யா - அமெரிக்காரஷ்யா - உக்ரைன்
ShareTweetSendShare
Previous Post

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

Related News

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies