ரஷ்யா - அமெரிக்கா இடையே போர்? - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Aug 3, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள், இரு நாடுகள் இடையேயான போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், ரஷ்யா அதனைச் செவி கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.

மாறாக, தனது தாக்குதலின் வீரியத்தை அந்நாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததுடன், அந்நாட்டுடன் வணிக செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறது.

மேலும், ரஷ்யா இன்னும் 50 நாட்களில் போரைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ கிடையாது எனவும், ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை அந்நாட்டின் மீதான போருக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த பேச்சால் சீண்டப்பட்ட ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை அனுப்ப ஆணையிட்டார். இதற்குப் பதிலளித்த ரஷ்யா, அமெரிக்காவைக் காட்டிலும் தங்களிடம் அதிக அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளதாகத் தெரிவித்தது.

அத்துடன், ஒலியைப் போன்று  10 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடிய ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸ் நாட்டில் நிலைநிறுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் நாட்டை சுற்றி நேட்டோ பல நாடுகள் உள்ளன. எனவே, அந்த நேட்டோ நாடுகளையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையில் ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரசில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், ராணுவப் பணியில் ஆரெஷ்னிக் ஏவுகணைகள் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதியில் அவை பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் எனவும் கூறினார்.

ஆரெஷ்னிக் ஏவுகணைகள், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாதவை. இதன் காரணமாக அவற்றை உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. அத்தகைய ஏவுகணைகளை நேட்டோ நாடுகளின் எல்லையில் நிலைநிறுத்துவது தற்போதுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் இத்தகைய போக்கு, உக்ரைன் போர் முடிவுக்கு வருவதைத் தடுப்பதுடன்,  மற்ற நாடுகளுடன் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா இடையேயான நேரடி போராகவும் இது மாற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Tags: War between Russia and America?ரஷ்யா - அமெரிக்கா இடையே போர்?ரஷ்யா - அமெரிக்காரஷ்யா - உக்ரைன்
ShareTweetSendShare
Previous Post

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

Next Post

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies