தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை முழுவீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து பணியைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு குழுவினர், முதல் நாளில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதி மக்களிடையே கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து சேலம் சென்ற கருத்துக் கணிப்பு குழுவினர், அங்குள்ள மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டு கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இன்று திருச்சியில் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட பின் மக்களின் கருத்துக்களை தொகுத்து வழங்கி, பிரம்மாண்ட கருத்துக் கணிப்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி வெளியிடவுள்ளது.