கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக, அதிர்ச்சி மற்றும் ஆச்சரியகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக் சயின்ஸ் உள்ளிட்டவை சார்ந்த வேலைகளில் சேர மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அந்நாட்டில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பிச்சை எடுப்பது முக்கிய தொழிலாக உருவெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23 கோடி. இதில் சுமார் 4 கோடி பேர் பிச்சைக்காரர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆறில் ஒரு பாகிஸ்தானியர் பிச்சை எடுப்பதைத் தனது பிரதான தொழிலான கொண்டுள்ளனர்.

டான் என்ற தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒவ்வொரு பிச்சைக்காரரும் தினமும் சராசரியாக 264 ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் 4 கோடி பிச்சைக்காரர்களும் சேர்ந்து ஒரு வருடத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வரும்.

இப்படி பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் எந்தவித வேலையும் செய்யாமல், மலைக்க வைக்கும் அளவுக்குப் பணம் சம்பாதித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதற்கு, இத்தனை கோடி மக்கள் இப்படி சோம்பேறிகளாக இருப்பதும் முக்கிய காரணம்.

பாகிஸ்தானில் உள்ள Business and Society Center  வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உடல்சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட, பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பிச்சை எடுக்கும் தொழிலில் குழந்தைகளும் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தெருக்களில் சுமார் 12 லட்சம் குழந்தைகள்  பிச்சை எடுத்து வருவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானியர்கள் உள்நாட்டில் மட்டும் பிச்சையெடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றும் பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பிச்சையெடுக்கும் மக்களில் 90 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. ஈராக், சவுதி உள்ளிட்ட நாடுகள் இது குறித்துப் பல முறை பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளன. மேலும், அப்படி பிச்சை எடுப்பவர்களைப் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியும் வருகின்றன.

ஒருபுறம் பாகிஸ்தான் அரசு நிதி கேட்டு ஒவ்வொரு நாட்டின் கதவுகளையும் தட்டிக்கொண்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி.

Tags: Pakistani beggars earn croresபாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies