கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!
Sep 24, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக, அதிர்ச்சி மற்றும் ஆச்சரியகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக் சயின்ஸ் உள்ளிட்டவை சார்ந்த வேலைகளில் சேர மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அந்நாட்டில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பிச்சை எடுப்பது முக்கிய தொழிலாக உருவெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23 கோடி. இதில் சுமார் 4 கோடி பேர் பிச்சைக்காரர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆறில் ஒரு பாகிஸ்தானியர் பிச்சை எடுப்பதைத் தனது பிரதான தொழிலான கொண்டுள்ளனர்.

டான் என்ற தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒவ்வொரு பிச்சைக்காரரும் தினமும் சராசரியாக 264 ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் 4 கோடி பிச்சைக்காரர்களும் சேர்ந்து ஒரு வருடத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வரும்.

இப்படி பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் எந்தவித வேலையும் செய்யாமல், மலைக்க வைக்கும் அளவுக்குப் பணம் சம்பாதித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதற்கு, இத்தனை கோடி மக்கள் இப்படி சோம்பேறிகளாக இருப்பதும் முக்கிய காரணம்.

பாகிஸ்தானில் உள்ள Business and Society Center  வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உடல்சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட, பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பிச்சை எடுக்கும் தொழிலில் குழந்தைகளும் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தெருக்களில் சுமார் 12 லட்சம் குழந்தைகள்  பிச்சை எடுத்து வருவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானியர்கள் உள்நாட்டில் மட்டும் பிச்சையெடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றும் பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பிச்சையெடுக்கும் மக்களில் 90 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. ஈராக், சவுதி உள்ளிட்ட நாடுகள் இது குறித்துப் பல முறை பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளன. மேலும், அப்படி பிச்சை எடுப்பவர்களைப் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியும் வருகின்றன.

ஒருபுறம் பாகிஸ்தான் அரசு நிதி கேட்டு ஒவ்வொரு நாட்டின் கதவுகளையும் தட்டிக்கொண்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி.

Tags: Pakistani beggars earn croresபாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

Related News

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

Load More

அண்மைச் செய்திகள்

சிறந்த இசையமைப்பாளர் விருது – ஜி.வி.பிரகாஷூக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழா – ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிபராசக்தி தாயார்!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies