கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!
Sep 12, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக, அதிர்ச்சி மற்றும் ஆச்சரியகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக் சயின்ஸ் உள்ளிட்டவை சார்ந்த வேலைகளில் சேர மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அந்நாட்டில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பிச்சை எடுப்பது முக்கிய தொழிலாக உருவெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23 கோடி. இதில் சுமார் 4 கோடி பேர் பிச்சைக்காரர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆறில் ஒரு பாகிஸ்தானியர் பிச்சை எடுப்பதைத் தனது பிரதான தொழிலான கொண்டுள்ளனர்.

டான் என்ற தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒவ்வொரு பிச்சைக்காரரும் தினமும் சராசரியாக 264 ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் 4 கோடி பிச்சைக்காரர்களும் சேர்ந்து ஒரு வருடத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வரும்.

இப்படி பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் எந்தவித வேலையும் செய்யாமல், மலைக்க வைக்கும் அளவுக்குப் பணம் சம்பாதித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதற்கு, இத்தனை கோடி மக்கள் இப்படி சோம்பேறிகளாக இருப்பதும் முக்கிய காரணம்.

பாகிஸ்தானில் உள்ள Business and Society Center  வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உடல்சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட, பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பிச்சை எடுக்கும் தொழிலில் குழந்தைகளும் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தெருக்களில் சுமார் 12 லட்சம் குழந்தைகள்  பிச்சை எடுத்து வருவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானியர்கள் உள்நாட்டில் மட்டும் பிச்சையெடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றும் பிச்சை எடுக்கும் தொழிலை  மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பிச்சையெடுக்கும் மக்களில் 90 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. ஈராக், சவுதி உள்ளிட்ட நாடுகள் இது குறித்துப் பல முறை பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளன. மேலும், அப்படி பிச்சை எடுப்பவர்களைப் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியும் வருகின்றன.

ஒருபுறம் பாகிஸ்தான் அரசு நிதி கேட்டு ஒவ்வொரு நாட்டின் கதவுகளையும் தட்டிக்கொண்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி.

Tags: Pakistani beggars earn croresபாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies