பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!
Jan 14, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சரின் தொகுதியில்  நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை, தலைமுறையாக வசித்துவரும் இன்னல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவராஜபுரம், மாரிமுத்து கெனால் தெரு, மாடகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகின்றன.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வந்தால் அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் தங்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறி ஒரு சிலர் சிவராஜபுரம் பகுதி மக்களின் புகைப்படத்தை எடுத்ததோடு அவர்களின் விவரங்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் மனுக்களைக் கூடப் பெறவில்லை என்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொருமுறை தொகுதிக்குள் வரும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரில், துணை முதலமைச்சரின் சொந்த தொகுதியின் சட்டமன்ற அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Government administration refuses to issue lease: People besiege Udhayanidhi officeஉதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Next Post

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies