உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் - மீட்பு பணி தீவிரம்!
Jan 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 6, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாசி மாவட்டம் தரலி என்ற பகுதியில் கீர் கங்கா ஆற்றில் மேகவெடிப்பால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பலர் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கீர் கங்கா ஆற்றின் மறுபுறத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது.

இதனிடையே சியானா சட்டி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டேராடூனில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற புஷ்கர் சிங் தாமி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதற்கிடையில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டபோது சேற்றுக்குள் சிக்கி உயிர்பிழைத்த நபர், சேற்றுக்குள் இருந்து வெளியேறி நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் காட்சி மற்றும் மேகவெடிப்பு காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். கனமழை காரணமாக உத்தரகாண்ட் பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நைனிடால் பகுதியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்தியா-சீன எல்லையை இணைக்கும் மலாரி தேசிய நெடுஞ்சாலை அருகே கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது

 

Tags: UttarakhandGanga riverUttarkashiTarali areaflash floods
ShareTweetSendShare
Previous Post

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

Next Post

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies