உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் - மீட்பு பணி தீவிரம்!
Sep 24, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாசி மாவட்டம் தரலி என்ற பகுதியில் கீர் கங்கா ஆற்றில் மேகவெடிப்பால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பலர் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கீர் கங்கா ஆற்றின் மறுபுறத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது.

இதனிடையே சியானா சட்டி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டேராடூனில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற புஷ்கர் சிங் தாமி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதற்கிடையில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டபோது சேற்றுக்குள் சிக்கி உயிர்பிழைத்த நபர், சேற்றுக்குள் இருந்து வெளியேறி நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் காட்சி மற்றும் மேகவெடிப்பு காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். கனமழை காரணமாக உத்தரகாண்ட் பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நைனிடால் பகுதியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்தியா-சீன எல்லையை இணைக்கும் மலாரி தேசிய நெடுஞ்சாலை அருகே கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது

 

Tags: UttarakhandGanga riverUttarkashiTarali areaflash floods
ShareTweetSendShare
Previous Post

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

Next Post

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

Related News

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டம் – அமைச்சர் பியூஷ் கோயல்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

இன்றைய தங்கம் விலை!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கு முடிவு – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

சிறந்த இசையமைப்பாளர் விருது – ஜி.வி.பிரகாஷூக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies