காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் - 5 தனிப்படைகள் அமைப்பு!
Sep 27, 2025, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

குடிமங்கலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மதுபோதையில் தந்தை மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் அவசர உதவி எண்ணான 100-க்கு அக்கம் பக்கத்தினர் தகவலளித்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முக வேல் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு காயமடைந்து காணப்பட்ட மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இவரை கொலை செய்ததோடு அங்கிருந்த காவல் வாகன ஓட்டுநரை துரத்தி சென்று தாக்க முயன்றனர்.அங்கிருந்து தப்பியோடிய ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலின் உடலை கைப்பற்றி தப்பியோடிய தந்தை மற்றும் இரண்டு மகன்களையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே தப்பியோடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சண்முகவேலை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதகாவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: special investigation team formedTiruppurSpecial Assistant Inspector of Policessi murder caseKudimangalam
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

Next Post

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies