காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் - 5 தனிப்படைகள் அமைப்பு!
Mar 19, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 6, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

குடிமங்கலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மதுபோதையில் தந்தை மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் அவசர உதவி எண்ணான 100-க்கு அக்கம் பக்கத்தினர் தகவலளித்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முக வேல் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு காயமடைந்து காணப்பட்ட மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இவரை கொலை செய்ததோடு அங்கிருந்த காவல் வாகன ஓட்டுநரை துரத்தி சென்று தாக்க முயன்றனர்.அங்கிருந்து தப்பியோடிய ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலின் உடலை கைப்பற்றி தப்பியோடிய தந்தை மற்றும் இரண்டு மகன்களையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே தப்பியோடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சண்முகவேலை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதகாவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: special investigation team formedTiruppurSpecial Assistant Inspector of Policessi murder caseKudimangalam
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

Next Post

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies