ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் தொடர்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஆகஸ்ட் மாதத்திற்கான கொள்கை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என தெரிவித்தார். பிப்ரவரி முதல் 3வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது எனவும் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.