எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தொண்டி மற்றும் பாம்பன் பகுதிகளிலிருந்து 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லைத்தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற கடற்படையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.