தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!
Aug 7, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இரவு பகல் பாராமல் சென்னையின் தூய்மையைப் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப்பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள 5 மண்டலங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பட்சத்தில், ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணிபாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு ஏற்கனவே அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியத்தைப் பெறவே போராடும் சூழலில் தனியாரிடம் ஊதியம் பெறுவது என்பது சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாகச் சென்னையின் முக்கியமான பகுதிகளில் குப்பைகள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. ராயபுரம், திருவிக நகர், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்திருக்கின்றன.

சென்னையில் அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன. கொரானா பெருந்தொற்று காலமாக இருந்தாலும் மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் சரி தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய களப்பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது ஒட்டுமொத்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருடத்திற்கு ஒரு நாள் தங்களின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சென்னை மாநகராட்சிசுகாதார சீர்கேடுSanitation workers' protest intensifies: Health problems due to stagnant garbageதூய்மைப்பணியாளர்கள் போராட்டம்தேக்கமடையும் குப்பை
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் காதல் தகராறு : 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

Next Post

ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கு : சுர்ஜித்தின் காவல் நீட்டிப்பு!

Related News

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கு : சட்டப்படி எதிர்கொள்வோம் – வழக்கறிஞர் பாலு!

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை : 50 ஆண்டுகால திரைப்பயணம் – ரஜினி கோவில் சிறப்பு பூஜை!

சென்னை ரிப்பன் மாளிகை : 7 வது நாளாக தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்!

சேலம் : காவலரை தாக்கிவிட்டு தப்பிய தந்தை, மகன்!

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : இளம்பெண் மீது தாக்குதல் – வெடித்த போராட்டம்!

நைஜீரியா : ஊட்டச்சத்துக்கு குறைபாட்டால் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் – முகம்மது யூனுஸ்

சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!

கோவை : ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை – ஊழியர் பணியிடை நீக்கம்!

தாம்பரம் : நல்ல சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்?

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies