தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இரவு பகல் பாராமல் சென்னையின் தூய்மையைப் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப்பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள 5 மண்டலங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பட்சத்தில், ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணிபாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு ஏற்கனவே அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியத்தைப் பெறவே போராடும் சூழலில் தனியாரிடம் ஊதியம் பெறுவது என்பது சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாகச் சென்னையின் முக்கியமான பகுதிகளில் குப்பைகள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. ராயபுரம், திருவிக நகர், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்திருக்கின்றன.

சென்னையில் அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன. கொரானா பெருந்தொற்று காலமாக இருந்தாலும் மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் சரி தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய களப்பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது ஒட்டுமொத்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருடத்திற்கு ஒரு நாள் தங்களின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தேக்கமடையும் குப்பைசென்னை மாநகராட்சிசுகாதார சீர்கேடுSanitation workers' protest intensifies: Health problems due to stagnant garbageதூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies