தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!
Apr 29, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இரவு பகல் பாராமல் சென்னையின் தூய்மையைப் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப்பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள 5 மண்டலங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பட்சத்தில், ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணிபாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற புகார் எழுந்துள்ளது. அதோடு ஏற்கனவே அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியத்தைப் பெறவே போராடும் சூழலில் தனியாரிடம் ஊதியம் பெறுவது என்பது சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாகச் சென்னையின் முக்கியமான பகுதிகளில் குப்பைகள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. ராயபுரம், திருவிக நகர், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்திருக்கின்றன.

சென்னையில் அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன. கொரானா பெருந்தொற்று காலமாக இருந்தாலும் மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் சரி தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய களப்பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது ஒட்டுமொத்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருடத்திற்கு ஒரு நாள் தங்களின் அருகில் அமர்ந்து உணவு உண்ணும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தேக்கமடையும் குப்பைசென்னை மாநகராட்சிசுகாதார சீர்கேடுSanitation workers' protest intensifies: Health problems due to stagnant garbageதூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies