நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் பரப்பப்படும் விஷமப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிந்து மருத்துவப் படிப்பு எனும் கனவை எட்டிப்பிடித்திருக்கிறார் விருதுநகர் மாவட்ட திருச்சுழியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி பூமாரி. விடா முயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சாதனை மாணவி பூமாரி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமம் தான் பூமாரியின் பூர்வீக ஊர். தந்தை முத்துப்பாண்டி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் பொன்னழகுவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார் பூமாரி. தாத்தா, பாட்டி ஆகிய இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலிலும், தாய் பொன்னழகு விறகு வெட்டி விற்கும் வேலையும் செய்து பூமாரி மற்றும் அவரோடு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் படிக்க வைத்து வந்துள்ளனர்.

திருச்சுழி சேதுபதி அரசுப்பள்ளியில் பயின்ற பூமாரி 2023ம் ஆண்டு 12ம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவப் படிப்பு மீதான அதீத பற்றுக் கொண்ட பூமாரி, கடந்த ஆண்டு பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம் பி பி எஸ் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தால் மீண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வெற்றியும் கண்டுள்ளார். நீட் தேர்வு என்பது அவ்வளவு கடினமானது அல்ல எனவும், பயிற்சி இருந்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்கிறார் சாதனை மாணவி பூமாரி

சிறுவயதிலிருந்தே மருத்துவப்படிப்பை பயில வேண்டும் என்ற பூமாரியின் கனவை நினைவாக்கியதில் அவரின் தாயார் பொன்னழகுவின் பங்கு அளப்பரியது. விறகு வெட்டி விற்பனை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தன் மகளைப் படிக்க வைத்து அவரின் மருத்துவக்கனவை நினைவாக்கியுள்ளார் பொன்னழகு

நீட் தேர்வு கடினமானது, குளறுபடிகள் நிறைந்தது, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி எனத் தமிழகம் முழுவதும் பரப்பப்படும் மாய பிம்பங்களுக்கு மத்தியில், கடின உழைப்பும் விடா பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் திருச்சுழியைச் சேர்ந்த பூமாரி.

Tags: ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட்neet exam newsneet examA medical dream come true: The NEET exam that gave a hand to a poor studentநனவான மருத்துவக்கனவு
ShareTweetSendShare
Previous Post

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

Next Post

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies