நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!
Nov 16, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் பரப்பப்படும் விஷமப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிந்து மருத்துவப் படிப்பு எனும் கனவை எட்டிப்பிடித்திருக்கிறார் விருதுநகர் மாவட்ட திருச்சுழியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி பூமாரி. விடா முயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சாதனை மாணவி பூமாரி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமம் தான் பூமாரியின் பூர்வீக ஊர். தந்தை முத்துப்பாண்டி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் பொன்னழகுவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார் பூமாரி. தாத்தா, பாட்டி ஆகிய இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலிலும், தாய் பொன்னழகு விறகு வெட்டி விற்கும் வேலையும் செய்து பூமாரி மற்றும் அவரோடு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் படிக்க வைத்து வந்துள்ளனர்.

திருச்சுழி சேதுபதி அரசுப்பள்ளியில் பயின்ற பூமாரி 2023ம் ஆண்டு 12ம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவப் படிப்பு மீதான அதீத பற்றுக் கொண்ட பூமாரி, கடந்த ஆண்டு பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம் பி பி எஸ் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தால் மீண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வெற்றியும் கண்டுள்ளார். நீட் தேர்வு என்பது அவ்வளவு கடினமானது அல்ல எனவும், பயிற்சி இருந்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்கிறார் சாதனை மாணவி பூமாரி

சிறுவயதிலிருந்தே மருத்துவப்படிப்பை பயில வேண்டும் என்ற பூமாரியின் கனவை நினைவாக்கியதில் அவரின் தாயார் பொன்னழகுவின் பங்கு அளப்பரியது. விறகு வெட்டி விற்பனை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தன் மகளைப் படிக்க வைத்து அவரின் மருத்துவக்கனவை நினைவாக்கியுள்ளார் பொன்னழகு

நீட் தேர்வு கடினமானது, குளறுபடிகள் நிறைந்தது, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி எனத் தமிழகம் முழுவதும் பரப்பப்படும் மாய பிம்பங்களுக்கு மத்தியில், கடின உழைப்பும் விடா பயிற்சியும் இருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் திருச்சுழியைச் சேர்ந்த பூமாரி.

Tags: ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட்neet exam newsneet examA medical dream come true: The NEET exam that gave a hand to a poor studentநனவான மருத்துவக்கனவு
ShareTweetSendShare
Previous Post

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

Next Post

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

Related News

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies