திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே இரவு பகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற பெண் ஒருவரைச் சித்திரவதை செய்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் மீது புகார் எழுந்துள்ளது. திமுக நிர்வாகியின் அட்டூழியத்தால் சித்ரவதைக்கு உள்ளாகி வரும் ஆதரவற்ற பெண் குறித்தும் அவர் படும் துயரங்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தட்டரஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தமிழ்செல்விக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் தமிழ்செல்வி அருகில் இருக்கும் ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று  குழந்தைகளின் பசியை போக்குவதோடு படிக்கவும் வைத்து வருகிறார். குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வசித்து வந்த கூரை வீட்டிற்கு மின்சார வசதி கேட்டு தமிழ்செல்வி அளித்த மனு கூரை வீடு என்பதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜூஸ் கம்பெனி மட்டுமல்லாது பக்கத்து வீட்டிற்கும் வேலைக்குச் சென்று சேர்த்த பணத்தில் தகர வீடு ஒன்றைக் கட்டி முடித்த தமிழ் செல்வி, அதற்கு மின்சார வசதி கேட்டு கோரிக்கை வைத்த போது பட்டா இருந்தால் தான் மின்சார வழங்க முடியும் என அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.  பட்டாவை வழங்க உதவுமாறு மனு கொடுக்க வந்த தமிழ்செல்வியை தன் வீட்டிற்கு வந்து வேலை செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலையின் கணவருமும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான தட்டரஹள்ளி நாகராஜ் நாகராஜன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

தமது வீட்டிற்கு வேலைக்கு வந்தால் உதவி செய்கிறேன் என மீண்டும் மீண்டும் நாகராஜ், தமிழ்செல்வியை வற்புறுத்தியுள்ளார். உங்கள் வீட்டில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தை வைத்து தம்மால் குழந்தைகளைப் பார்க்க முடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்த தமிழ் செல்வியை நாகராஜ் மிரட்டத் தொடங்கியுள்ளார்.  என் வீட்டிற்கு வேலைக்கு வராத நீ எப்படி நிம்மதியாக வாழ முடியும் எனச் சவால்விட்ட நாகராஜ், தமிழ்செல்வி இல்லத்தின் முன்பாக அடியாட்களை வைத்து மதுபான பாட்டில்களை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திமுக அவைத் தலைவர் நாகராஜின் அடியாட்களிடமிருந்து தமது குழந்தைகளைப் பாதுகாக்கப் பகலில் வேலைக்குச் சென்று வந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்துக் கொண்டே இருப்பதாக தமிழ்செல்வி கண்ணீர் வடிக்கிறார். இரவுபகலாக உழைத்துக் கட்டிய வீட்டிற்குப் பட்டா கேட்டுச் சென்ற ஆதரவற்ற பெண் ஒருவரை திமுக பிரமுகர் நாகராஜ் நடத்தியிருக்கும் விதம் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: பெண்ணுக்கு சித்ரவதைDMKகிருஷ்ணகிரிDMK executive's atrocity: Torture of a woman who went for helpதிமுக நிர்வாகியின் அட்டூழியம்
Share
Tweet
SendShare
Previous Post

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies