உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் நல மருத்துவர்கள் இதில் பங்கேற்று, தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விளக்கமளித்தனர்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்று பெண்கள் நினைப்பது முற்றிலும் தவறான செய்தி என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.