சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!
Aug 8, 2026, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நிலவு குறித்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 என்ற 3  விண்கலன்களை இந்தியா இதுவரை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இதில் 2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும் அதன் ஆர்ப்பிட்டர் தற்போது நிலவைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து நிலவு குறித்த முக்கிய தகவல்களை அது பூமிக்கு அனுப்பி வருகிறது.

நிலவு பூமிக்கு அருகில் வரும்போது, அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது என்பதைச் சந்திரயான்-2 விண்கலம்தான் அண்மையில் கண்டுபிடித்தது. இந்த தகவல் மூலம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவிற்குச் செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவின் தரையில் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான புகைப்படத்தைச் சந்திரயான்-2 தற்போது அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் மாதம், Intuitive Machines என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு ஒரு லேண்டரை அனுப்பியது. நிலவின் தென் துருவத்தில் IM-2 லூனார் என்ற அந்த லேண்டர் வெற்றிகரமாக இறங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த விண்கலம் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்ததால் அதனால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை.

மார்ச் 7ம் தேதி அந்த லேண்டர் விபத்துக்குள்ளானது குறித்த சந்திரயான்-2 புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. Orbiter High Resolution Camera-வில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் லேண்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான துல்லியமான பல தகவல்களை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த புகைப்படத்தை ஜெர்மனியில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். நிலவில் உள்ள பள்ளங்கள் குறித்தும், இத்தகைய பள்ளங்கள் உள்ள பகுதிகளில் லேண்டர்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் இந்த புகைப்படங்கள் புதிய தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,
சந்திரயான்-2 எடுத்த இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROஇஸ்ரோNew photo sent by Chandrayaan-2சந்திரயான்-2நிலவுv
Share
Tweet
SendShare
Previous Post

மாநில அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

கோவை : உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies