பொறியியல் படிப்புகளுக்கான 2-வது சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 22 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 421 கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2 கட்ட கலந்தாய்வு முடிவில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 858 இடங்களில் 92 ஆயிரத்து 423 இடங்கள் நிரம்பி உள்ளதாகவும்,
மீதம் 95 ஆயிரத்து 435 இடங்கள் கலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 90 சதவீதத்துக்கு மேல் 56 கல்லூரிகளிலும், 80 சதவீதத்துக்கு மேல் 82 கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி இருப்பதாகவும், குறிப்பாக, 22 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.