மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தொடர்ந்து ஏழரை லட்சம் ரூபாய் நிதியைத் தமிழக அரசு வழங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், 25 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து 25 லட்சத்திற்கான காசோலையை அஜித்தின் குடும்பத்தினரிடம் அமைச்சர் பெரியகருப்பன், ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர்.