சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் 10 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, சேகா்பாபு ஆகியோர் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், அரசு சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழுவுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடருமென தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.