Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி... நல்ல முதலாளி...!
Jan 14, 2026, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

nvidia நிறுவனத்தில் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்கள் மில்லியனர்களாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது? இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாக பாா்க்கலாம்.

வீடியோ கேம்களுக்கான சிப்களை உருவாக்கும் நிறுவனங்களில் முதன்மையானது, nvidia. தைவானை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கரான Jensen Huang, 1998ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

உலகின் பல நிறுவனங்கள் NVIDIA தயாரிக்கும் சிப்களைதான் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள், பேஸ்புக், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்கள் கூட, NVIDIA நிறுவனத்தின் சிப்களைதான் நம்பி உள்ளன.

இப்படி, தொழில்நுட்ப துறையில் NVIDIA ஆதிக்கம் செலுத்துவதால், அதன் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு, சுமார் 13 லட்சம் கோடி ரூபாய். ஒரு நிறுவனத்தின் சிஇஓ பில்லியனராக இருப்பது சாதாரண விஷயம்தான்.

ஆனால், ஒரு நிறுவனத்தின் ஊழியர்களில் 80 சதவீதம் பேர் மில்லியனராக இருப்பது சாதாரணமானது அல்ல. அந்தச் சாதனையைதான் NVIDIA படைத்துள்ளது. அந்த 80 சதவீதம் பேரிலும், பாதி ஊழியர்களின் சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலராக உள்ளது.

இதனை இந்திய மதிப்பில் கணக்கிட்டால், சுமார் 200 கோடி ரூபாய் வரும். NVIDIA ஊழியர்களின் இந்த அதீத பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே காரணம், அந்நிறுவனத்தின் சிஇஓ Jensen Huang-தான். தனது நிறுவன ஊழியர்களை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை அவர் அளித்து வருகிறார். NVIDIA நிறுவன பங்குகளை அதன் ஊழியர்கள் சலுகை விலையில் வாங்கவும் அவர் வழிவகை செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நமது ஊழியர்களை நாம் நன்றாகப் பார்த்துக் கொண்டால், மற்ற அனைத்தும் தானாகவே நல்ல விதத்தில் நடைபெறும் எனக் கூறுகிறார்.

மேலும், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 42 ஆயிரம் ஊழியர்களின் ஊதிய விவரங்களை மாதம்தோறும், தானே சரிபார்த்து வருவதாகவும் Jensen Huang தெரிவிக்கிறார். இதற்காகப் பிரத்யேக app-களை பயன்படுத்தி வருவதாக விளக்கம் அளிக்கும் Jensen Huang, உலகில் உள்ள எந்த சிஇஓ-வை காட்டிலும், அதிக பணக்காரர்களை, தான் உருவாக்கியுள்ளதாகப் பெருமிதம் தெரிவிக்கிறார்.

ஊழியர்கள் நலனில் அவர் காட்டும் அக்கறை, அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகப் பலரும் தெரிவிக்கின்றனர். Jensen Huang குறித்து NVIDIA நிறுவன ஊழியர்களிடம் கேட்டால், ஒன்றைதான் சொல்வார்கள். அது, ”எங்க மொதலாளி. நல்ல மொதலாளி.”

Tags: Nvidia80% of Nvidia employees are millionaires: Our boss... a good boss...!வீடியோ கேம்NVIDIA தயாரிக்கும் சிப்
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

Next Post

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies