இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.அதுதொடர்பான முழு விபரங்களை இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், பயணநேரத்தை குறைக்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. விமான நிலையங்கள் விரிவாக்கம், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைப்பு என அதற்கான பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், 150ஆவது வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீமாதா வைஷ்ணவ்தேவி கத்ரி, அஜ்னி – புனே ஆகிய வழித்தடங்களில், 3 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெங்களூருவின் ஆர்.வி.ரோடு முதல் ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை 18 புள்ளி 82 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மெட்ரோ வசதி செய்யப்பட்டுள்ளது. சேவையைத் தொடங்கி வைத்த பின், மெட்ரோ ரயிலில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் இணைந்து அவர் பயணம் செய்தார்.

அப்போது, ரயிலில் பயணித்த மாணவர்களுடன் சிரித்து பேசி மகிழ்ந்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பார்த்ததாகவும், பெங்களூருவும், அதன் இளைஞர்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் மோடி குறிப்பிட்டார்.மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைமூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகவும், இந்தியாவின் வலிமை உலகெங்கும் பறைசாற்றப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்த மோடி, எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத வேகத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என விமர்சித்ததுடன், 50 சதவீத வரியையும் அமெரிக்கா விதித்துள்ள நிலையில், பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiNo force can stop India's growth: PM Modiஇந்தியாவின் வளர்ச்சி
Share
Tweet
SendShare
Previous Post

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

Next Post

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies