இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி - உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!
Sep 26, 2025, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுத சப்ளையை ஜெர்மனி அதிபர் நிறுத்தியுள்ளார். இதற்கு ஜெர்மனியின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்ன காரணம்? விரிவாகப் பார்க்கலாம்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 22 மாதங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இஸ்ரேல், காசாவின் 80 சதவீத பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எஞ்சிய 20 சதவீத பகுதிகளையும் கைப்பற்ற அந்நாடு திட்டமிட்டது.

ஆனால், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அங்குள்ள பணய கைதிகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக, இஸ்ரேலின் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்தார். இருந்தபோதும், காசாவை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான ஒப்புதலை இஸ்ரேல் அமைச்சரவை வழங்கியது.

இந்த முடிவுக்குப் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை இனி நிறுத்திகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

ஜெர்மனி அதிபரின் இந்த அறிவிப்பு, உள்நாட்டிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் கட்சியின் சகோதர கட்சியாக அறியப்படும் Christian Social Union-ம் அதிபரின் முடிவைக் கண்டித்துள்ளது. அதிபரின் இந்த முடிவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், தனது முடிவுகுறித்து அதிபர் போதிய விளக்கங்களை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், வரும் நாட்களில் கூட்டணி கட்சிகள் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. ஜெர்மனி நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் Horst Seehofer, ராணுவ உதவியை அரசு நிறுத்தியது, தவறான வெளியுறவுக்கொள்கை உதாரணமாக விளங்குவதாக விமர்சித்துள்ளார்.

இப்படி, கூட்டணி கட்சியினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். சரி, இவர்களை எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம் எனப் பார்த்தால், ஜெர்மனி அதிபருக்குத் தற்போது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. arsten Müller என்ற எம்பி., இந்த விவகாரம் தொடர்பாகச் சொந்த கட்சியிலிருந்து முதல் குரலை எழுப்பியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேட்டோ நாடுகளையும், ஜெர்மனியின் ராணுவத்தையும் பலப்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் முயற்சியை, அதிபரின் இந்த முடிவு அலட்சியப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியைச் சேர்ந்த மற்றொரு செனட்டரான Joe Chialo, இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை திரும்பப் பெற்றது ஜெர்மனி அதிபரின் ஆணவ செயல் எனச் சாடியுள்ளார். இப்படி சொந்த கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பில் இருந்தும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார் ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ். இப்போது அவருக்கு முன்னால் இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன.

ஒன்று, முன்வைத்த காலைப் பின் வைப்பது. அதாவது, பழையபடியே இஸ்ரேலுக்கு ராணுவ உதவி செய்வது. மற்றொன்று சொந்த கட்சியினரின் எதிர்ப்பையும் மீறித் தனது முடிவில் திடமாக இருப்பது. என்ன செய்யப் போகிறார் பிரீட்ரிக் மெர்ஸ்? சிறிது நாட்களில் தெரிய வரும்.

Tags: Israeli attack.ஜெர்மனிGermany halts military aid to Israel - strong condemnation at homeஜெர்மனி அதிபர்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Next Post

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

Related News

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

Load More

அண்மைச் செய்திகள்

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தயார் நிலையில் உள்ள படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies