பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி செல்ல இருப்பதாக அறிவித்தனர்.
ஆனால் பேரணிக்கு அனுமதி பெறவில்லையென டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர்.