ஆசியக் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தாய்லாந்தில், 22 வயதுகுட்பட்டோருக்கான ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 80 கிலோ கிராம் எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரித்திகா 4 க்கு 1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல் டோக்டாசினை வீழ்த்தித் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.