வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.