மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Sep 29, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து நடைபெற இருந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் காவல்துறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சேலம் – திருச்சி பிரதான சாலையில் ராஜ சபரி திரையரங்கம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் முஸ்லீம்கள் ஒரு பகுதியையும், இந்துக்கள் ஒரு பகுதியையும் மயானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக மயானத்தின் உட்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்ட முஸ்லீம்கள், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அப்பணியை நிறுத்தினர். மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லீம்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுக் குறிப்பிட்ட நிலம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என வருவாய்த்துறையில் ஆவணங்கள் மாற்றப்பட்டாலும், இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டுவதாகக் கூறி நடைபெறும் கட்டுமானப் பணிகள் மீண்டும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.

கடந்த 28 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இரு தரப்பும் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் ஒருதலை பட்சமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகப் பொதுமக்கள் கோரிய அனுமதியும் காவல்துறையினரால் மறுக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக, அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஒருதலைபட்ச முடிவால் இரு தரப்பினரிடையே மோதல் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Complaint alleging encroachment on a cemetery owned by the corporation - demand for actionமயானம் ஆக்ரமிப்பு
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

Next Post

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

Related News

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

ஆந்திரா : 500 மீ தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies