சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்திக்கவிருந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய
அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சி தலைவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை!
தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத திமுக அரசுக்கு, அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர்களைத் தடுப்பதற்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? தமிழகத்தில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.