முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ஆவது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.