அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!
Oct 2, 2025, 03:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப் படும் நிலங்கள் பகல் நேரங்களில் கழிவுகளை கொட்டும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

426 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கூடுதலாக 626 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்  பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கம்பி வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் உணவக கழிவுகளும், தொழிற்சாலைகள் கழிவுகளும் கொட்டப்படும் குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளால் குறிப்பிட்ட பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, அதிகளவில் நடமாடும் வாகனங்களால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. அதோடு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி சட்டவிரோதச் சம்பவங்கள் அரங்கேற்றும் இடமாகவும் மாறிவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

சட்டத்திற்குப் புறம்பாகக் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளுக்கு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுவதாலும் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அப்பகுதியில் உள்ள மரங்களில் குடியிருக்கும் பறவைகள் குடியிருப்பதாகக் கூறி மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டன. தற்போது கொட்டப்படும் கழிவுகளை உண்ண வரும் கழுகு உள்ளிட்ட பறவைகளால் மீண்டும் விமானங்களைத் தரையிறக்கும் போது இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கோவை விமான நிலைய விரிவாக்கம் எந்தளவிற்கு அவசியமானதோ, அதே அளவிற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil Nadu government shows negligence: Fear of bird strikes on planesஅலட்சியம் காட்டும் தமிழக அரசுகோவை விமான நிலையத்தை விரிவாக்கம்
ShareTweetSendShare
Previous Post

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

Next Post

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies