அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப் படும் நிலங்கள் பகல் நேரங்களில் கழிவுகளை கொட்டும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

426 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கூடுதலாக 626 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்  பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கம்பி வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் உணவக கழிவுகளும், தொழிற்சாலைகள் கழிவுகளும் கொட்டப்படும் குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளால் குறிப்பிட்ட பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, அதிகளவில் நடமாடும் வாகனங்களால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. அதோடு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி சட்டவிரோதச் சம்பவங்கள் அரங்கேற்றும் இடமாகவும் மாறிவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

சட்டத்திற்குப் புறம்பாகக் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளுக்கு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுவதாலும் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அப்பகுதியில் உள்ள மரங்களில் குடியிருக்கும் பறவைகள் குடியிருப்பதாகக் கூறி மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டன. தற்போது கொட்டப்படும் கழிவுகளை உண்ண வரும் கழுகு உள்ளிட்ட பறவைகளால் மீண்டும் விமானங்களைத் தரையிறக்கும் போது இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கோவை விமான நிலைய விரிவாக்கம் எந்தளவிற்கு அவசியமானதோ, அதே அளவிற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil Nadu government shows negligence: Fear of bird strikes on planesஅலட்சியம் காட்டும் தமிழக அரசுகோவை விமான நிலையத்தை விரிவாக்கம்
ShareTweetSendShare
Previous Post

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

Next Post

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies