அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 11:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப் படும் நிலங்கள் பகல் நேரங்களில் கழிவுகளை கொட்டும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

426 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கூடுதலாக 626 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்  பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கம்பி வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் உணவக கழிவுகளும், தொழிற்சாலைகள் கழிவுகளும் கொட்டப்படும் குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளால் குறிப்பிட்ட பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, அதிகளவில் நடமாடும் வாகனங்களால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. அதோடு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி சட்டவிரோதச் சம்பவங்கள் அரங்கேற்றும் இடமாகவும் மாறிவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

சட்டத்திற்குப் புறம்பாகக் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளுக்கு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுவதாலும் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அப்பகுதியில் உள்ள மரங்களில் குடியிருக்கும் பறவைகள் குடியிருப்பதாகக் கூறி மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டன. தற்போது கொட்டப்படும் கழிவுகளை உண்ண வரும் கழுகு உள்ளிட்ட பறவைகளால் மீண்டும் விமானங்களைத் தரையிறக்கும் போது இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கோவை விமான நிலைய விரிவாக்கம் எந்தளவிற்கு அவசியமானதோ, அதே அளவிற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil Nadu government shows negligence: Fear of bird strikes on planesஅலட்சியம் காட்டும் தமிழக அரசுகோவை விமான நிலையத்தை விரிவாக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

Next Post

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies