பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!
Oct 4, 2025, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் கூட்டமாக நடக்கும் இறுதிச் சடங்குகள், மீட்பு ஹெலிகாப்டரின் விபத்து என அசாதாரண சூழலால் ஸ்தம்பித்துள்ள பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையாலும், மேக வெடிப்பாலும், கைபர் பக்துன்க்வா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இந்த கனமழை, வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 340 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பியூனர் மாவட்டத்தில் மட்டும் 207 பேர் உயிரிழந்துள்ளனர். அதே மாகாணத்தில் உள்ள புனேர் மாவட்டத்தில் 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளதும், 184 பேர் வரை உயிரிழந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பேரும், கில்ஜித் பல்டிஸ்தானில் 5 பேரும் பேரிடரில் சிக்கிப் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மாயமான பலரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பிற மீட்பு அமைப்புகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுவாட், பஜாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்வதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த, ஹெலிகாப்டர் ஒன்றும் எதிர்பாராத விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த, விமானி உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தது அந்நாட்டின் நிலையை மேலும் துயரமாக்கியுள்ளது.

அதே வேளையில், பாகிஸ்தானின் வட-மேற்கு பகுதிகளில் கனமழை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், பாகிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்து உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags: pakistan floodpakistan news todayFloods ravage Pakistan: More than 300 people killed in 48 hours..!
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

Next Post

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பு – டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies